தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பளிக்க தவறியதாக குற்றச்சாட்டு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

 

Advertisement

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த த.வெ.க உறுப்பினரும் வழக்கறிஞருமான ஜி.கார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற கட்சியின் பிரச்சார கூட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர்.

இந்த கூட்டத்திற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஏற்படுத்தவில்லை. உரிய பாதுகாப்பு இல்லாததுதான் இந்த விபத்து நடைபெற காரணமாக அமைந்தது.

மாவட்ட நிர்வாகத்தின் முறையான திட்டமிடல் இல்லாததே விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. எனவே, கடமையை செய்ய தவறிய மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி, கரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Advertisement