தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரின் முங்கரில் மறுதேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: பீகார் மாநிலத்தின் முங்கர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவின்போது பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெளி நபர்களால் அதிரடியாக கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முங்கர் மக்களவை தொகுதியின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர் அனிதா தேவி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்ட முங்கர் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
Advertisement

மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் பிரசன்ன பாலச்சந்திர வராலே ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் ஏன் முதலாவதாக உயர் நீதிமன்றத்தை அணுகாமல், நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்பது கேள்வியாக உள்ளது. மேலும் இந்த மனுவை விடுமுறைக்கால சிறப்பு அமர்வு விசாரிக்க முகாந்திரம் இல்லை. அதேபோன்று தேர்தல் ஆணையத்துக்கும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

Advertisement

Related News