தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெருங்குடி குப்பைக்கிடங்கில் தீ: 3 மணிநேரம் போராடி அணைப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை, லாரிகள் மூலம் கொண்டு வந்து பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. இங்கு குப்பை தரம் பிடிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு, நேற்று மாலை 3 மணியளவில் திடீரென தீப்பற்றி அப்பகுதி முழுவதும் பரவியது.

காற்றின் வேகம் காரணமாக, கரும்புகை வெளியேறி ரேடியல் சாலை வரை பரவியதால், வாகன ஒட்டிகளுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்பட்டது. தகவலறிந்து துரைப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, வேளச்சேரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

குப்பை குவியலில் தீ பரவியால் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மாநகராட்சி தெற்கு துணை கமிஷனர் அதாப் ரசூல், பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் சுரேஷ் குமார் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர். குப்பை குவியலில் தென்னை ஓலைகள் மற்றும் காலி பாட்டில்கள் கிடந்ததாகவும், அதிக வெப்பத்தால் பாட்டில் வெப்பத்தில் ஓலைகளில் தீப்பற்றி தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News