தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழம் அறுவடை தொடங்கியாச்சு...விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே, பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழம் அறுவடை சீசன் தொடங்கிய நிலையில், விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை மலைப்பகுதியில் தாண்டிக்குடி, மஞ்சள்ப்பரப்பு, கொங்கப்பட்டி, பூலத்தூர், கும்பரையூர், மங்களங்கொம்பு, கும்பம்மாள்பட்டி உள்ளிட்ட கீழ் பழனிமலைப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாரம்பரியமாக காபி சாகுபடி நடந்து வருகிறது.

Advertisement

இந்தியாவைப் பொறுத்தவரை 4.5 லட்சம் ஏக்கரில் காபி சாகுபடி நடந்து வருகிறது. தமிழகம் காபி சாகுபடியில் 3ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அரபிக்கா, ரப்போஸ்டா என்னும் இருவகை காபி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், அரபிகா செடி வகையாகும். ரப்போஸ்டா மர வகையாகும். காபி செடிகள் நட்டபின் 4 ஆண்டில் பலன் தரத்தொடங்கும். அக்டோபரில் பழங்கள் பழுத்து, ஜனவரியில் அறுவடை சீசன் நிறைவடையும்.

இந்தாண்டு காபி செடிகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை, நல்ல மழை, தாண்டிக்குடி காபி வாரியத்தின் ஊக்குவிப்பு நடவடிக்கை ஆகிய காரணங்களால் விவசாயிகள் அதிகளவில் காபி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழங்களை செடியிலிருந்து பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பறிக்கப்பட்ட காபி பழங்களை வெயிலில் உலர வைத்து, இயந்திரங்கள் மூலம் பழங்களில் உள்ள வெளித்தோல் நீக்கப்படுகிறது. பின்னர் கழுவி சுத்தம் செய்கின்றனர்.

இவ்வாறு சுத்தம் செய்து காபி தளர்களை காபி கொட்டைகளாக மாற்றுவதற்காக மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். பிரேசில், வியட்நாம் நாடுகளில் சீதோஷ்ண நிலை பாதிப்பால், அந்த நாடுகளில் காபி விளைச்சல் பாதிகப்பட்டுள்ளது. இதனால், இந்திய காபிக்கு உள்நாடு, வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது. இதனால், காபி சீசன் தொடங்கிய நிலையில் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இங்கு விளையும் காபியில் நறுமணம், கூடுதல் சுவை இருப்பதால், அதிக மவுசு உள்ளது. விலை அதிகரிப்பால் காபி விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Advertisement

Related News