தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டணம் வசூலிக்கும் கருவி பழுதானால் டோல்கேட்டில் இலவசமாக பயணிக்க அனுமதி: நவம்பர் 15ம் தேதி முதல் அமல்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் கருவிகள் பழுதடைந்தால் கட்டணமின்றி பயணிக்கலாம், ஃபாஸ்டேக் அபராதமும் குறைப்பு என வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நிவாரணங்களை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ பயன்பாட்டை ஒன்றிய அரசு தீவிரமாக ஊக்குவித்ததன் விளைவாக, தற்போது அதன் பயன்பாடு 98 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் பெருமளவில் குறைந்துள்ளது. இருப்பினும், ஃபாஸ்டேக் இல்லாத அல்லது அது முறையாக செயல்படாத வாகனங்களிடமிருந்து இரட்டிப்புக் கட்டணம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, தவறான ஃபாஸ்டேக் கட்டணப் பிடித்தம் செய்யும் சுங்கச்சாவடி முகமைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதுபோன்ற தவறுகள் 70 சதவீதம் குறைந்தன.

Advertisement

இந்தச் சூழலில், வாகன ஓட்டிகளின் சுமையைக் குறைக்கும் வகையிலும், சுங்கச்சாவடி முகமைகளின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி, செல்லுபடியாகாத ஃபாஸ்டேக் கொண்ட வாகனங்கள், யுபிஐ போன்ற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தினால், சாதாரண சுங்கக் கட்டணத்தை விட 1.25 மடங்கு மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும். இது தற்போதைய இரட்டிப்புக் கட்டண அபராதத்தை விட குறிப்பிடத்தக்க அளவு குறைவாகும்.

மேலும், சுங்கச்சாவடியில் உள்ள மின்னணு கட்டண வசூல் கருவி பழுதடைந்து செயல்படாத நிலையில், செல்லத்தக்க மற்றும் செயல்படும் ஃபாஸ்டேக் கொண்ட வாகனங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படும். சுங்கச்சாவடி நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறுக்காக வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Related News