தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுருளி அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கம்பம்: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று காலை வனத்துறையினர் அனுமதி வழங்கினர். தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை ஐயப்ப கோயில் சீசன் என்பதால் ஏராளமான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்த அருவியின் நீப்பிடிப்பு பகுதிகளான மேகமலை, தூவானம், அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் கடந்த நவ.30 மற்றும் டிச.1ம் தேதிகளில் பலத்த மழை பெய்தது.

Advertisement

இதனால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 2ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், வெளியூர்களில் இருந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், இன்று காலை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால், 2 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News