தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியாருக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்ப்பு எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம்: திருமாவளவன் பேச்சு

தர்மபுரி: பெரியாருக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் இழைத்துள்ளனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசினார். தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் திமுக தோழர்களின் வேகத்துக்கு இணையாக, விடுதலை சிறுத்தைகளும் களத்தில் இருப்போம். வெற்றியை குவிப்போம். மீண்டும் தளபதியை தமிழகத்தின் முதலமைச்சராக நாற்காலியில் அமர வைப்போம். இதன் மூலம் தான் பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் கண்ட கனவை நாம் நினைவாக்க முடியும். இல்லையென்றால் பெரிய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

Advertisement

பெரியார் பாசறையில் உருவான இயக்கம் அதிமுக.

இன்றைக்கு பெரியாருக்கு எதிரான, பெரியாரை கொச்சைப்படுத்தும் சக்திகளுடன் இணைந்து, தமிழ் மண்ணில் இருந்து பெரியார் அரசியலை துடைத்தெறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கும் சக்திகளோடு கைகோர்த்து கொண்டிருக்கிறார்கள். அது திராவிட அரசியலுக்கு எதிரானது. அவரின் மானசீக குரு, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கூட செய்கின்ற துரோகம். வலதுசாரி சக்திகளிடம் இருந்தும், பிற்போக்கு சக்திகளிடம் இருந்தும் இந்த மண்ணில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பெரியார், அண்ணா மாடல் அரசு, கலைஞர் அமைத்து நிறுவிய அரசு, மீண்டும் இந்த மண்ணில் தொடர வேண்டும். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி நம்மை வீழ்த்த இங்கு முயற்சி செய்கிறது. சதி முயற்சிகளுக்கு இங்கு இடமில்லை. தேர்தல் களம் நம்மை நோக்கி வருகிறது. அதற்கு தயாராவோம். இவ்வாறு திருமாவளவன் எம்பி பேசினார்.

Advertisement

Related News