தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் புகைப்படத்தை கண்டது சிலிர்ப்பூட்டியது: முதல்வர் பதிவு

சென்னை: லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லத்தில் பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் புகைப்படத்தை கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அம்பேத்கர், லண்டன் பொருளியல் பள்ளியில் படிக்கும்போது தங்கியிருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இல்லத்தை பார்வையிடும் வாய்ப்பினை பெற்றேன். அந்த இல்லத்தின் அறைகளினூடே நடந்து செல்கையில் பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது.

Advertisement

இந்தியாவில் சாதியின் பேரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளர்ந்து, லண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்து தரும் நிலைக்கு உயர்ந்தார். குறிப்பாக, பெரியாரும் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது. இப்படியொரு உணர்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்க பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்! ஜெய் பீம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் செவ்வணக்கம்

சென்னை: லண்டன் நகரில் மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: “தத்துவஞானிகள் இதுவரை உலகை பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் நோக்கம் என்பது அதனை மாற்றுவதுதான்”.உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News