தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் இருக்கைகள் இல்லாத பயணியர் நிழற்குடை: நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் மஞ்சங்காரணை கிராமத்தில் பயணியர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இருக்கைகள் இன்றி காணப்படுகிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர். பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் மாணவ - மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

Advertisement

மேலும், மஞ்சங்காரணையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலை சம்மந்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மஞ்சங்காரணை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிபூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து மூலம் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு பேருந்து நிலையமோ அல்லது பயணியர் நிழற்குடையோ இல்லை. இதனால், பயணிகள் வெட்ட வெளியில் கொளுத்தும் வெயிலிலோ அல்லது மழை காலங்களில் மழையிலோ நனையும் நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த 2016 - 2017ம் ஆண்டு ₹5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

ஆனால், அந்த பயணியர் நிழற்குடையில் உள்ள இரும்பு நாற்காலிகள் உடைந்து சேதம் ஏற்பட்டு அதன் தகடுகள் பயணிகளை பதம் பார்த்தது தற்போது பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரும்பு இருக்கைகள் காணவில்லை. மேலும், பயணிகள் இரும்பு கம்பிகள் மீது அமர்ந்து பயணிகள் பேருந்து ஏறி செல்கிறார்கள். மஞ்சங்காரணை பகுதியில் பயணிகளின் வசதிக்காக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், அது பயன்பாடில்லாமல் உள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தை சீரமைத்து புதிய நாற்காலிகள் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இனியாவது பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கா விட்டால் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மஞ்சங்காரணை பேருந்து நிறுத்தத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு ₹5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதில், பயணிகள் அமருவதற்கு இரும்பாலான நாற்காலிகள் அமைக்கப்பட்டது. ஆனால், சில வருடங்கள் கழித்து இரும்பு நாற்காலிகள் சேதம் அடைந்தது. பின்னர், தற்போது இரும்பு இருக்கைகள் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதை திருடிச்சென்று விட்டனர். இதனால், பயணிகள் பயணியர் நிழற்குடைகள் பேருந்து வரும் வரை அமர முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்து ஏறி செல்கிறார்கள். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகளை பொறுத்த வேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News