தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியகுளம் அருகே கல்லாறு மலைக்கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து சோலார் மின்வேலி

*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Advertisement

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கல்லாறு மலைக்கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்ட சோலார் மின் வேலியால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளகெவி ஊராட்சியின் சின்னூர் மலைக் கிராமம் உள்ளது. இந்த மலைக் கிராம மக்கள் சாலை வசதி இல்லாத நிலையில், கல்லாற்று பகுதியின் வழியாக பெரியகுளம் வந்து தான் அவர்கள் வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், கல்லாறுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து விவசாய விளை பொருட்களை சேதப்படுத்துவதை தவிர்ப்பதற்காக சோலார் மின் வேலி அமைத்துள்ளனர். ஆனால் சில விவசாயிகள் சாலையை ஆக்கிரமித்து சோலார் மின் வேலி அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சோலார் மின்வேலியில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் மலைக் கிராமத்திற்கு செல்லும் சிறியவர் முதல் பெரியவர் வரை அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பகுதியில் தான் மலைக் கிராம மக்களுக்கு நியாய விலைப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அப்பொழுது சிறுவர் சிறுமியர் சோலார் மின் வேலியை தொட்டால் உயிர்ப்பலி ஏற்படும் நிலை உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே சோலார் மின் வேலியால் உயிர் பலி ஏற்படும் முன் சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ள மின்வேலியை அகற்றி விவசாயிகள் பட்டா நிலத்திற்குள் மின் வேலி அமைக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News