தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரம்பூர், வியாசர்பாடி கோயிலில் ரூ.72 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு

பெரம்பூர்: சென்னை பெரம்பூரில் உள்ள அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் இன்று காலை ரூ.72 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவிருக்கும் மண்டபப் பணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர மேயர் பிரியாவின் வார்டு மேம்பாட்டு நிதிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் ஓட்டேரி, ஏகாங்கிபுரம் முதல் தெருவில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி மற்றும் பெரம்பூர், ராஜீவ்காந்தி நகரில் ரூ.28.29 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா தெற்கு பகுதியில் ரூ.5.75 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் அருள்மிகு கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் ரூ.3.89 கோடி மதிப்பில் யோகா தியான மண்டபம், நூலகம் மற்றும் அன்னதான கூட கட்டுமானப் பணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இக்கோயில், வடபழனியில் அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலின் உபகோவிலாக செயல்பட்டு வருகிறது.

வியாசர்பாடியில் 185 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் மேலும் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிடம் அங்கீகாரம் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும், மடாலயத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதில் 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு, அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லை, துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.