தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

பாடாலூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா குருவம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் கீர்த்தனாவிற்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை தனது கணவருடன் சொந்த ஊரான அடைக்கம்பட்டி கிராமத்திற்கு வந்தார். பின்னர் நேற்று தனது கணவர் நாகேந்திரன் அவரது சொந்த ஊரான குருவம்பட்டிக்கு சென்று விட்டார். நேற்று இரவு கீர்த்தனா தனது கணவருக்கு செல்போனில் பேசினார்.

அப்போது அவர் எனது அப்பா, அம்மா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். நீங்கள் அடைக்கம்பட்டிக்கு வாருங்கள் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கீர்த்தனா தூக்கு போட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். உடனடியாக நாகேந்திரன் அவரது மாமனார் செல்வராஜுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக வீட்டிற்கு கீர்த்தனாவை காப்பாற்றுங்கள் என்று கதறினார்.

இதையடுத்து செல்வராஜ் தனது வீட்டில் வந்து பார்த்தபோது கீர்த்தனா சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கீர்த்தனாவிற்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால், சார் ஆட்சியர் கோகுல் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Related News