தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 7 பெண்களுக்கு மூச்சுத்திணறல்

Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணிக்காக 50க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர். இதில் பரமேஷ்வரி, சசிகலா, மாலதி, இந்துஜா, செட்டியம்மாள், மாரியம்மாள், லட்சுமி, சவீதா, சுதா, கலாவதி, மகாலட்சுமி ஆகியோர் நேற்று மாலை துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இவர்களில் சசிகலா, லட்சுமி, பரமேஸ்வரி, கலாவதி ஆகியோர் இரண்டாவது மாடியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்தனர். அப்போது கெமிக்கல் மருந்தை ஊற்றி சுத்தம் செய்தபோது திடீரென அறுவை சிகிச்சை அரங்கம் முழுவதும் லேசான புகை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் 4 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

4 பேரும் சத்தம் போட்டனர். இதனால் அரங்குக்கு வெளியே இருந்த பணியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக 7 பேரும் உள்ளே சென்றனர். அப்போது அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், வழக்கமாக பயன்படுத்தும் கெமிக்கல் மருந்து தான் அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஏன் இவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். யாருக்கும் பாதிப்பு இல்லை. லேசான கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் மட்டுமே ஏற்பட்டது. அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் நலமுடன் உள்ளனர். அச்சப்பட தேவையில்லை என்றனர்.

Advertisement

Related News