தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணலி புதுநகரில் மழைநீர் தேக்கம்: நாற்காலியில் அமர்ந்து மக்கள் மறியல்

 

Advertisement

திருவொற்றியூர்: சென்னை மணலி புதுநகர் 16 வார்டில் சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டப் பணி முடிவடைந்து, குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் காங்கிரீட் அமைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணியை கான்ட்ராக்ட் எடுத்த ஒப்பந்ததாரர் பணிகளை உடனடியாக மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக பல தெருக்கள் குண்டும் குழியுமாக பொதுமக்கள் நடந்த செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த 270வது பிளாக் 90வது தெரு குண்டும் குழியுமாகி மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ‘’பழுதடைந்த சாலையை சீரமைக்கவேண்டும்’ என்று வலியுறுத்தி சாலையில் நாற்காலிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’ தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து உள்ளதால் மழைநீர் தேங்கி அவதிப்படுகிறோம். நடந்துக்கூட செல்ல முடியவில்லை. எனவே, சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement