தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்

லக்னோ: பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. உத்தரபிரதேச வளர்ச்சி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை யோகி ஆதித்ய நாத் எடுத்து வருகிறார். அதன்ஒரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஜனதா தர்ஷன் எனப்படும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
Advertisement

அதன்படி காளிதாஸ் மார்க்கில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் யோகி ஆதித்ய நாத், “ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் அரசு அதிகாரிகள் கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டு, அதனை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதுதான் அரசின் முன்னுரிமை. எனவே பொதுமக்கள் தொடர்பான பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், “எந்த பணியையும் புறக்கணிப்பதையும், அதில் அலட்சியம் காட்டுவதையும் சகித்துக் கொள்ள முடியாது. பிரச்னைகளுக்கு தீர்வு காணாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

Advertisement

Related News