தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான வழக்கில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் அதிரடி கைது

Advertisement

புனே: போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான விவகாரத்தில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புனேவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்களான அனிஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா இருவரும் ஓட்டலுக்கு சென்று விட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

சுமார் 3 மணி அளவில் கல்யாணிநகர் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மற்றொரு கார் மீது விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டிய 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவருக்கு 16 மணி நேரத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் அந்த சிறுவன் பாரில் மது அருந்தும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியானது.  சிசிடிவி காட்சியை ஆதரமாக கொண்டு மது பான பார் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேர் மீதும், கார் ஓட்டிய சிறுவனின் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சிறுவனுக்கு மதுபானம் சப்ளை செய்த பார் சீல் வைக்கப்பட்டது.

Advertisement