தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் குறைதீர் கூட்டத்தில் தையல் இயந்திரம் வழங்கல்

ஊட்டி : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தையல் இயந்திரம் கோரி விண்ணப்பித்த நடுவட்டம் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு, நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விலையில்லா தையல் இயந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

Advertisement

இதில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை,வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 133 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதை போட்டி,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு முதல் பாிசாக ரூ.10 ஆயிரம்,இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம்,மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடுவட்டம் டிஆர் பஜார் பகுதியை சேர்ந்த கஜலட்சுமி என்பவர் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தார்.இதனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து அவருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

பிரதான் மந்திரி ஜன் ஜோதி ஆதிவாசி நியாய மகா அபியான் யோஜனா திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கட்டப்பட்ட 929 வீடுகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சந்திரசேகரிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ராதாகிருஷ்ணன்,மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிச்சாமி (நிலம்) மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News