தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் தனியார் காடுகள் சட்ட விலக்கு கோரி திரண்ட மக்கள்

நாகர்கோவில் : தனியார் காடுகள் சட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு முழு விலக்கு வழங்க வேண்டும். கைவச நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கு, அணைக்கட்டு புறம்போக்கு என கூறி பட்டா வழங்க மறுப்பதை கைவிட்டு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.

Advertisement

அரசு நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நில உரிமை, குடிமனை உரிமை, நில உரிமை பட்டா கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் நேற்று நடந்தது.

நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமானோர் வருகை தந்து மனுக்கள் அளித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமை வகித்தனர்.

விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement