தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து மயங்கி விழும் மக்கள்

 

Advertisement

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 10கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். விஜய் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த பெண் உடனடியாக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் முன்கூட்டியே பிரசாத்தை முடித்தார் விஜய்

நாமக்கல்லில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரம் செய்த இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் வணிகர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், சனிக்கிழமைகள் தோறும் பிரசாரம் செய்துவருகிறார். அந்த வகையில் நாமக்கல்லில் இன்று பிரசாரம் செய்தார்.

நாமக்கல்-சேலம் ரோடு கேஎஸ் தியேட்டர் மெயின் ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறையினர் 20 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதியம் நாமக்கல் புறப்பட்டார். விஜய் வருகையையொட்டி காலை முதலே நாமக்கல்-சேலம் ரோட்டில் கட்சியினர் திரண்டு இருந்தனர்.

நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள கேஎஸ் தியேட்டர் அருகே விஜய் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். விஜய் பிரசாரத்தையொட்டி நாமக்கல்- சேலம் ரோட்டில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

பஸ் ஸ்டாண்ட் பிரதான ரோடு, பரமத்திரோடு ஆகிய பகுதிகளிலும் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பிரசாரம் மேற்கொண்ட சேலம் ரோட்டில் ஏரளாமான ஜவுளி கடைகள், ஓட்டல்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளன. அவை அனைத்தும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாமக்கல் பிரசாத்தை முடித்துக்கொண்டு கரூர் சென்றடைந்தார் அங்கு அவரை காண ஆயிரக்கணக்கானோர் காத்து கிடந்தனர். விஜய் வந்து பேசிய போது ஒரு பெண் மயங்கி விழுந்தார் . அவரை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து கூட்ட நெரிசல் காரணமாக அடுத்தடுத்து மயங்கி விழுந்த நிலையில் விஜய் பிரசாத்தை உடனடியாக முடித்து கொண்டார்.

 

 

 

Advertisement

Related News