தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலில் நீராடி திதி கொடுத்த மக்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்தும் வழிபட்டனர். கிராமகோயில்களில் சிறப்பு வழிபாடும் நடந்தது.
Advertisement

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டிணம் நவபாஷபன தீர்த்தம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி மாரியூர் ஆகிய தீர்த்தக் கடலில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளை செய்து சாமி வழிபாடு செய்தனர்.

இதற்காக நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை உள்மாவட்டத்தின் அனைத்து பகுதிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பொது மக்கள் அதிகாலையில் கடல்களில் புனித தீர்த்தமாடினர்.

தேவிப்பட்டிணம் கடற்கரையில் உள்ள நவபாஷான தீர்த்தம், ராமர் தீர்த்தம் ஆகியவற்றில் மூழ்கி தீர்த்தமாடி அங்குள்ள கடலடைத்த பெருமாள் கோயிலில் வழிபாடு செய்தனர்.

திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் நீராடி, கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபட்டaனர். பிறகு அங்குள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர், திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதிஜெகநாத பெருமாள் கோயில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்து, அங்குள்ள பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தும், முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். புனித கடற்கரைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், மாவட்டம் முழுதும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம், சேதுக்கரை மற்றும் தேவிப்பட்டிணத்திற்கும், முதுகுளத்தூரில் இருந்து மாரியூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் கிராமப்புற கோயில்களில் அமாவாசை விஷேச பூஜைகள், வழிபாடு நடந்தது.

திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் மற்றும் வராஹிஅம்மன் கோயில், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசாலாட்சி உடனுரை காசி விஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், அபிராமம் அருகே உள்ள அ.தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுரை தரணீஸ்வரர், சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுரை கைலாசநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுரை செஞ்சிடைநாதர், மேலக்கடலாடி அருகே உள்ள நித்தியகல்யாணி உடனுரை வில்வநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் சோமேஸ்வரர் ஆகிய கோயில்களில் விஷேச பூஜைகள் நடந்தது.

ஏனாதி பூங்குளத்து அய்யனார், மாடன், ஆப்பனூர் அரியநாயகி அம்மன், கடலாடி பாதாள காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், ராக்கச்சிஅம்மன். காணிக்கூர் பாதாளகாளியம்மன் உள்ளிட்ட மாவட்டத்திலுளள் கிராம கோயில்களில் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement

Related News