தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலுவை வைத்திருக்கும் நிதிகளையும் முழுமையாக விடுவிக்க ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து கட்சி பாராமல் எம்எல்ஏக்கள் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பேச்சு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட்) பேசியதாவது: சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2152 கோடியை தராமல் வேறு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்தது வரலாற்றில் இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த எந்த ஒன்றிய அரசும் செய்யாத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Advertisement

ஒன்றிய அரசின் தாக்குதல்களுக்கு எதிராகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு ஆதரவாகவும் மாநில அரசு மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முழு ஒத்துழைப்பை நல்கும். ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ள அனைத்து நிதிகளையும் முழுமையாக விடுவிக்க கட்சி பாராமல் அவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரல் எழுப்ப வலியுறுத்துகிறேன்.

அரசு ஊழியர், ஆசிரியர்களின் ‘சரண்டர் விடுப்பு பணப்பலன்’ வரவேற்கத்தக்கது.

இதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி முடித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும்.

மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து இருப்பதால் கலைஞர் கனவு இல்லம் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டத்தில் வீடுகள் கட்டிட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிட வேண்டும். காப்பி, தேயிலை, ரப்பர், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விளை பொருட்களுக்கான விலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இவற்றிற்கு எல்லாம் கூடுதலான நிதியினை ஒதுக்கிட வேண்டும். பயிர்க் காப்பீட்டுக்கு அரசே தனி நிறுவனம் தொடங்கினால் விவசாயிகள் அதிகம் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement