தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஆப்கன் மீது நேரடி போர் நடத்தப்படும்: பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) அமைப்பை அழிப்பதாக கூறி, ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே எல்லை மோதல் நீடிக்கிறது. கடந்த வாரம் இருநாடுகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டது. இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த கத்தார், துருக்கி நாடுகள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தின.

Advertisement

கடந்த 19ம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே இரண்டாம் சுற்று அமைதி பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானின் உள்துறை துணையமைச்சர் ரஹ்மத்துல்லா முஜிம் தலைமையிலான குழுவினரும், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, விரிவான தீவிரவாத எதிர்ப்பு குறித்த திட்டத்தை ஆப்கானின் தலிபான் அரசிடம் பாகிஸ்தான் அளித்தது. இது குறித்து சியால்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், “இஸ்தான்புல்லில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் முடிவு விரைவில் தெரிய வரும். ஆனால் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் மீது நேரடியாக பாகிஸ்தான் போரை தொடங்கும்” என்றார்.

Advertisement