தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசாவில் ஒரே நாளில் 63 பேர் பலி: இஸ்ரேல் தாக்குதலால் பரபரப்பு

Advertisement

கெய்ரோ: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் இரண்டாம் ஆண்டை நெருங்கும் நிலையில், காசாவில் இதுவரை 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் ஓரளவு பின்வாங்கினாலும், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சூழலில், நிரந்தரப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா முன்னெடுத்த திட்டத்தின் அடிப்படையில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் முதல் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக, ஹமாஸ் பிடியில் உள்ள 48 இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியக் கைதிகளை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்திருந்தாலும், நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ‘ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை’ எனத் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்கிறது. நேற்று மட்டும் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், பொதுமக்கள் மற்றும் நிவாரண உதவிக்காகக் காத்திருந்தவர்கள் உட்பட 63 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News