தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

8வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்: வருகிற 19ம் தேதி ரயில்வே ஊழியர்கள் போராட்டம்

புதுடெல்லி: 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்குமாறு வலியுறுத்தி ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு சார்பில் வருகிற 19ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உடனடியாக 8வது ஊதியக்குழுவை அமைக்குமாறும், தசரா விழாவிற்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ரயில்வே கூட்டமைப்புகள் சார்பில் வருகிற 19ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், ‘‘ரயில்வே தொழிலாளர்கள் உட்பட ஒன்றிய அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதால் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

 

Advertisement

Related News