தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம்: தாசில்தார் கைது

திருச்சி: தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(31). இவரது உறவினருக்கு சொந்தமான 11,070 சதுரடி இடம் திருச்சி கே.சாத்தனூரில் உள்ளது. அந்த இடத்துக்கான பட்டாவில் ஆணையர், திருச்சி மாநகராட்சி என்று தவறுதலாக உள்ளதை கணினியில் மாற்றம் செய்யக்கோரி திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார்.

Advertisement

இந்த விண்ணப்ப நிலை குறித்து தெரிந்துகொள்வதற்காக வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், வட்டாட்சியருமான அண்ணாதுரை(50) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது அவர் மனுவை கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகுமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற ராஜேந்திரன், அங்கிருந்த வட்டாட்சியர் அண்ணாதுரையிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அண்ணாதுரையை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துவாக்குடிமலை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisement