போரூர் சுங்கச்சாவடி அருகே பைக் மோதி ரோந்து காவலர் பலி
Advertisement
இதில் ரோந்து பணியில் காவலர் குமரன் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார். விபத்தை ஏற்படுத்திய மற்றொரு பைக்கை ஓட்டிவந்த மர்ம நபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். படுகாயம் அடைந்த நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரோந்து காவலர் குமரனின் சடலத்தை கைப்பற்றி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி படுகாயங்களுடன் சிகிச்சை பெறும் மர்ம நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Advertisement