தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரம்; மணிப்பூரில் மருத்துவமனை சூறை: மருத்துவர் உள்ளிட்டோர் படுகாயம்

இம்பால்; மணிப்பூரில் மருத்துவ சிகிச்சையின் அலட்சியத்தால் நோயாளி இறந்ததாகக் கூறி, உறவினர்கள் மருத்துவமனையைத் தாக்கியதில் மருத்துவர் காயமடைந்தார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் நேற்று மட்டும் முந்தைய 24 மணி நேரத்திற்குள் இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர். சிங்சுபம் ஓங்பி என் மஞ்சு (35) என்ற பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் நேற்று காலையிலும், யம்பேம் சஞ்சோய் (50) என்பவர் நேற்று முன்தினம் மாலையிலும் உயிரிழந்தனர். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இருவரும் இறந்ததாக அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

Advertisement

மஞ்சுவின் மரணத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், நேற்று மருத்துவமனைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மருத்துவமனையின் சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், மருத்துவர் பிரிட்டம்குமார் உள்ளிட்ட பணியாளர்களை கடுமையாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மருத்துவர் உள்ளிட்டோர், அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை மற்றும் வழக்கமான அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் உடனடியாக நிறுத்துவதாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

Related News