தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு 10 பேருக்கு கோர்ட் பிடிவாரன்ட்

நெல்லை:நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக்ராஜன் (28). பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி பாளையங்கோட்டையில் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாளை போலீசார் நவீன், முருகன் உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் நம்பிராஜன் மட்டும் ஆஜரானார். இதில், முருகன், பவித்ரன், முத்துஇசக்கி, மற்றொரு ஐயப்பன், சங்கர் ஆகிய 5 பேர் ஆஜராகாததற்கான மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 பேர் ஆஜராகவில்லை. ஏற்கனவே ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஜராகாத 9 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாளையங்கோட்டை போலீசார் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஹேமா விசாரித்து நம்பிராஜன் உட்பட 11 பேரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜாமீன் ரத்து செய்யபட்ட சரவணன், ஐயப்பன், தம்பான், இசக்கிதுரை, முத்துசரவணன், சுரேஷ், ரமேஷ், லட்சுமணகாந்தன், வானுமாமலை, முத்து ஆகிய 10 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement