தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு அருகே கொட்டும் மழையில் 2 மணி நேரம் பயணிகள் ரயில் மறியல் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்

 

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்றிரவு மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து, கொட்டும் மழையில் 2 மணி நேரத்துக்கு மேல் ரயில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ரயில்வே அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூர் வழியாக அரக்கோணம் வரை நாள்தோறும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் கிளம்பியது. அப்போது எதிர்திசையில் மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதனால் செங்கல்பட்டு அருகே பாலூர் ரயில் நிலையத்தில் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரமாகியும் மீண்டும் மின்சார ரயில் இயக்கப்படவில்லை.

இதனால், ரயிலில் இருந்த பயணிகள் ஆத்திரமாகி, கொட்டும் மழையில் மும்பையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயிலின் முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் கடந்த ஒரு மாத காலமாக இதேபோல்தான் ரயில் தாமதம் நடந்து வருகிறது. இதேபோல் நாள்தோறும் நடுவழியில் மின்சார ரயிலை நிறுத்தினால், நாங்கள் எப்படி குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கோ அல்லது வீட்டுக்கோ செல்ல முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அதிகாரிகளின் உறுதியை ஏற்று ரயில் பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர், அந்த மார்க்கத்தில் ரயில் சேவை துவங்கியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Advertisement

Related News