கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல்
Advertisement
கட்சி நிகழ்ச்சிகளை 3 நாட்களுக்கு ரத்து செய்து, இரங்கல் கூட்டங்களை நடத்த வேண்டும். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): பொது வாழ்வில் அனுபவ செறிவுள்ள தலைவரை கேரள மாநில மக்கள் மட்டும் அல்ல, நாட்டின் ஒட்டு மொத்த மதச்சார்பற்ற, சமூக நல்லிணக்கம் பேணும் ஜனநாயக சக்திகள் இழந்து விட்டனர். அச்சுதானந்தன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் தலைவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இதேபோல் மமக தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement