தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்சி கூட்டங்களுக்கான வழிமுறை சிறப்பு அமர்வில் விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி உத்தரவு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரையைச் சேர்ந்த வழக்கறிஞர் திருக்குமரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குறுகிய தெருக்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், நீர்நிலைகள் மற்றும் விமான நிலைய பகுதிகள் தவிர்த்து ஊருக்கு வெளியே கட்சி பொது அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

Advertisement

இதேபோல் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் தூத்துக்குடி காந்திமதிநாதன் ஆகியோர், ‘‘வருங்காலங்களில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்களை கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து 5 கிமீ தொலைவில் நடத்துவதற்கு தேவையான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்குமாறு உத்தரவிட வேன்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி பூர்ணிமா ஆகியோரது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ‘‘அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோ அகியவற்றிற்கு அனுமதி வழங்கும் முன் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிய மனுக்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்த மனுக்களை விசாரிப்பதற்காக இரு நீதிபதிகள் அமர்வு விரைவில் அமைக்கப்படும், அதன்பிறகு அனைத்து மனுக்களும் அங்கு விசாரிக்கப்படும்’’ என்றனர்.

Advertisement