தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்சிக்காரர் - வழக்கறிஞர்கள் இடையே டெல்லி கோர்ட்டில் பயங்கர மோதல்: இரு தரப்பிலும் போலீசார் வழக்கு

புதுடெல்லி: டெல்லியில் நீதிமன்றத்திற்கு நீதிபதி வராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கட்சிக்காரர் ஒருவர் பெண் வழக்கறிஞரைத் தாக்கியதாகவும், பதிலுக்கு அவரை வழக்கறிஞர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும் வெளியான தகவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், கடந்த 12ம் தேதி நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், கட்சிக்காரர் ஒருவரை வழக்கறிஞர்கள் குழுவாகச் சேர்ந்து சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

வழக்கறிஞர்கள் தரப்பில் கூறுகையில், ‘நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதி வராததால், கட்சிக்காரர் ஒருவர் ஆத்திரமடைந்துள்ளார். அவர் தனது இளநிலை வழக்கறிஞரை படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதைத் தடுக்க முயன்ற பெண் வழக்கறிஞரைத் தாக்கி, அவரிடம் தவறாக நடந்துகொண்டாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக வழக்கறிஞர்கள், அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது’ என்றனர். ஆனால், கட்சிக்காரர் தரப்பில் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷ் என்ற அந்த கட்சிக்காரர், தனது வழக்கு தொடர்பான கோப்புகளை வழக்கறிஞரிடம் திருப்பிக் கேட்டுள்ளார்.

அவர் கோப்புகளைத் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, ஹர்ஷையும், அவருடன் வந்த 70 வயது தாயையும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருடன் சேர்ந்து சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து, இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில், டெல்லி போலீசார் இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். பெண் வழக்கறிஞரைத் தாக்கியதாக ஹர்ஷ் மீதும், அவரையும் அவரது தாயையும் தாக்கியதாக சில வழக்கறிஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News