தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின் விற்ற 9 வாலிபர்கள் சிக்கினர்

பெரம்பூர்: பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.  கொடுங்கையூர் பகுதியில் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் கைமாற்றப்படுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை கொடுங்கையூர் மூலக்கடை பகுதியில் 5 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் 2 கிராம் மெத்தபெட்டமின் மற்றும் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement

பிடிபட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ஹனி ஸ்ரீடிபன் (20), சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (23), திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த லிங்குமணி என்ற மேத்யூ (23), ஆகாஷ் என்ற கிரி (23) மற்றும் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (29) என்பது தெரிய வந்தது.

இவர்கள் பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமின் வாங்கி வந்து சென்னையில் பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு விற்பனை செய்து வந்ததும், இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவருக்கு ஒருவர் பழக்கமாகி அதன் மூலம் அவ்வப்போது மெத்தபெட்டமின் மற்றும் கஞ்சாவை கைமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று காலை வியாசர்பாடி கூட்செட் அருகே ஒருவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் சிறிய கவரில் மெத்தபெட்டமின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சேர்ந்த அத்திக்கூர் ரகுமான் (25) என்பதும், இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சுபேர் என்ற சுபி (25) என்ற நபரிடமிருந்து மெத்தபெட்டமின் வாங்கி பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து முகமது சுபேரையும் கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் படி புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இம்ரான் (26), இர்பான் (24) ஆகிய 2 பேரை பிடித்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 3 கிராம் மெத்தபெட்டமின் கைப்பற்றப்பட்டது. இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைனை விற்பனை செய்துள்ளனர். உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News