தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரிய பெருமக்களின் முன்னேற்றத்துக்கு கழகமும் - கழக அரசும் என்றும் துணை நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்!

 

Advertisement

சென்னை: ஆசிரியர்கள் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு சிலையை செதுக்க சிற்பி தேவை. அதுபோல ஒரு குழந்தையை சிறுவயதில் இருந்தே உருவாக்கி அன்புள்ள, அறிவுள்ள, சமூக அக்கறை உள்ள மனிதர்களாய் மாற்றுபவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களுள் நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்து, கல்வியில் புரட்சி செய்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளான இன்று செப்.5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ஆசிரியர்கள் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; இருளை அகற்றி வெளிச்சம் பரப்பும் சூரியன் போல், அறியாமை அகற்றி அறிவு ஒளி பரவிடச் செய்யும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ச்சமூகம் அறிவுசார் சமூகமாக வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தவர்கள் ஆசிரியர்களே! வகுப்பறையில் தங்களையே மெழுகுவர்த்தியாக ஏந்தி, மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். ஆசிரிய பெருமக்களின் முன்னேற்றத்துக்கு கழகமும் - கழக அரசும் என்றும் துணை நிற்கும்! என்று பதிவிட்டுள்ளார்.

 

Advertisement