தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடாளுமன்றத்திற்கு சென்ற திமுக எம்பி எம்.எம்.அப்துல்லாவை மறித்து கேள்வி கேட்ட சிஐஎஸ்எப் அதிகாரி: துணை ஜனாதிபதியிடம் புகார்

புதுடெல்லி: மக்களவை கட்டிடத்திற்குள் சென்ற தன்னை தடுத்தி நிறுத்திய சிஐஎஸ்எப் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தங்கருக்கு திமுக மாநிலங்களவை எம்பி எம்.எம்.அப்துல்லா புகார் கடிதம் எழுதி அனுப்பு வைத்துள்ளார். தனது புகார் கடிதத்தில் எம்பி எம்.எம்.அப்துல்லா கூறியிருப்பதாவது: நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற கட்டிடத் வளாகத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். பிற்பகல் 2.40 மணியளவில், நான் நாடாளுமன்ற ஹவுஸ் தோட்டத்திற்குள் நுழைந்தபோது அங்கிருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி என்னை தடுத்து நிறுத்தினார். அப்போது நாடாளுமன்றத்திற்கு எதற்காக வந்தீர்கள் என்று என்னிடம் சம்பந்தம் இல்லாத பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
Advertisement

இது திட்டமிட்டு செய்தது போன்று இருந்தது. அவரது இந்த நடத்தையால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏதும் இல்லாவிட்டாலும், நாடாளுமன்றத்தின் உள்ளே செல்வதற்கு அனைத்து அதிகாரமும் சட்டபூர்வமாக உள்ளது. அதன் அடிப்படையில் தான் நான் உள்ளே சென்றேன். தவறு செய்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போன்று மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலை நாட்டவும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Advertisement