தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி 2 இடங்களில் வாக்களித்தது எப்படி..? தேர்தல் ஆணையம் பதில் கூற இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

திருவனந்தபுரம்: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்திலும், உள்ளாட்சித் தேர்தலில் வேறு ஒரு இடத்திலும் வாக்களித்தது எப்படி என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும் என்று கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

ஒன்றிய இணையமைச்சரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுரேஷ் கோபியின் சொந்த ஊர் திருவனந்தபுரம் ஆகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை எல்லா தேர்தலிலும் அவர் திருவனந்தபுரத்தில் தான் வாக்களித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு அவர் தன்னுடைய முகவரியை திருச்சூருக்கு மாற்றினார். பின்பு அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் குடும்பத்துடன் திருச்சூரில் வாக்களித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுரேஷ் கோபி குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் ஓட்டு போட்டார்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுனில்குமார் கூறியது: கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுரேஷ் கோபியும், குடும்பமும் திருச்சூரில் வசிப்பதாக கூறி அங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஓட்டு போட்டார்கள். ஆனால் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தில் இவர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இது எப்படி சாத்தியமாகும் என்பது புரியவில்லை. இதுதொடர்பாக சுரேஷ் கோபியும், தேர்தல் ஆணையமும் பதில் கூறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement