தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியபடி 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிகாட்டியபடி 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றியஅரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பாஜ அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது.

அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. இதையொட்டி, ஊரகத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு 100 நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்காததை தனது அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதில், நடப்பாண்டு பட்ஜெட் தொகை ரூ.86,000 கோடியிலிருந்து ரூ.62,553.73 கோடியாக குறைந்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஒன்றிய பாஜ அரசு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, உடனடியாக 2024-25ம் ஆண்டு நிலுவையில் உள்ள தொகையை தனி நிதியாக ஒதுக்கி, நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.86,000 கோடியை மாநிலங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய பாஜ அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.