தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பார்க்கிங் கட்டணம் செலுத்த தாமதமானதால் காரால் மோதி தடுப்புகளை உடைத்து வெளியேற முயற்சி: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் செலுத்த தாமதமானதால் டோல்கேட் தடுப்புகள் மீது காரால் மோதி உடைத்துவிட்டு வெளியேற முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயணி ஒருவர், காரில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். டோல்கேட்டில், பார்க்கிங் கட்டணம் செலுத்த காரை நிறுத்தினார். அப்போது, சர்வர் கோளாறு ஏற்பட்டு பார்க்கிங் கட்டண விவரங்கள் பதிவிறக்கம் ஆகவில்லை. 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பயணி டோல்கேட் ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார்.

Advertisement

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பயணி காரை ஓட்டிச் சென்று தடுப்புகளை உடைத்து வெளியேற முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டோல்கேட் ஊழியர்கள் காரை வழிமறித்து நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, டோல்கேட் ஊழியர்கள் சர்வர் கோளாறு காரணமாக பார்க்கிங் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும், தடுப்புகளை உடைத்ததற்காக காரின் உரிமையாளர் ரூ.7,500 அபராதம் செலுத்த வேண்டும், என்றனர். தொடர்ந்து, போலீசார் இருதரப்பினரிடம் விசாரித்தனர். பின்னர், ரூ.3 ஆயிரம் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு கார் உரிமையாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பயணி ரூ.3ஆயிரம் அபராதம் செலுத்தி ரசீது பெற்று காரை எடுத்துச் சென்றார்.

Advertisement