தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பார்க்கிங்கை விட்டு கார் வெளியில் செல்லவில்லை அஜித்குமார் மீது நிகிதா பொய் புகார் அளித்தாரா? முரண்பாடான பதில்களால் சிபிஐ சந்தேகம்

மதுரை: மடப்புரம் கோயில் பார்க்கிங்கை விட்டு நிகிதாவின் கார் வெளியில் செல்லவில்லை என்றும், அஜித்குமார் மீது நகை காணவில்லை என அவர் அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என்றும் சிபிஐ அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.

அஜித்குமாரின் நண்பரான பிரவீன்குமார், தம்பி நவீன்குமார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 முறைக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர். இது தவிர அரசு மருத்துவர், கோயில் ஊழியர் ஆகியோரிடமும் விசாரித்துள்ளனர். நகை காணாமல் போனதாக திருப்புவனம் போலீசில் புகார் கூறிய பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமியிடம் சிபிஐ அதிகாரிகள் 2 முறை விசாரணை நடத்தி கிடுக்கிப்பிடியான கோள்விகளை கேட்டிருந்தனர். நிகிதாவிடம் இரண்டாம் முறை நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

அதாவது, நிகிதா கார் சாவியை சில நிமிடங்களிலேயே அஜித்குமார் கொடுத்துவிட்டதாகவும், கோயில் பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என்றும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கோயிலில் இருந்து கார் எங்குமே செல்லாத நிலையில், அஜித்குமார் மீது நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அஜித்குமார் மரண வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News