தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவிற்கு தயாராகும் பாரீஸ்: 206 நாடுகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

பாரீஸ்: உலகின் மிக பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்னும் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர் வீரங்கங்கனைகள் ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் குவிய தொடங்கியுள்ளனர். 33வது ஒலிம்பிக்ஸ் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதன்படி பல்வேறு நாடுகளில் இருந்து ஒலிம்பிக்ஸ் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீரர்கள் பாரீஸ் நகரில் குவிய தொடங்கியுள்ளனர். அங்குள்ள ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான், உருகுவே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் முதல் ஆளாக வந்து சேர்ந்துள்ளனர்.
Advertisement

ஒலிம்பிக்ஸ் கிராமம் மற்றும் அங்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழாவில் இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டை, வில்வித்தை என 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரீஸ் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் நகரை ஒட்டிய கிராமத்தில் 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது 18 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 40 நாடுகளை சேர்ந்த 1750 பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Related News