தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு கடலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை: திருவொற்றியூரில் சோகம்

சென்னை: திருவொற்றியூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் கிரண்குமார். இவரது மகன் சாந்த் (14), மாதவரம் தபால் பெட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சந்தியா (16), மணலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். மாணவன் சாந்த் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் ஒரே தெருவில் வசிப்பதால், கடந்த ஒரு வருடமாக ஒருவருக்கொருவர் நட்பாக பழகி, பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர். பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து பேசியதால், இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், படிக்கின்ற வயதில் காதலிக்க கூடாது எனவும், இதனால் உங்கள் எதிர்காலம் பாதிக்கும் எனவும் அறிவுரை கூறி, இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்ககூடாது, என இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் இவர்கள், ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல் பெற்றோருக்கு தெரியாமல் தொடர்ந்து காதலித்து வந்தனர்.
Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சாந்த், காதலி சந்தியாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். இதனைபார்த்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, பெற்றோர், 2 பேரின் செல்போன் நம்பருக்கு போன் செய்தபோது அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால், 2 பேரும் இரவு வீட்டிற்கு வந்து விடுவார்கள் என இருதரப்பு பெற்றோர்களும் காத்திருந்தனர்.

ஆனால், இரவு 11 மணி ஆகியும் 2 பேரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், இரு தரப்பினரும் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு சென்று தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை திருவொற்றியூர் நல்ல தண்ணீர், ஓடைகுப்பம் அருகே கடலில் சாந்த், சந்தியா ஆகிய 2 பேரும் பிணமாக மிதப்பதை கண்ட மீனவர்கள், உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, தங்கள் பிள்ளைகள் கடலில் விழுந்து இறந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இருவரது பெற்றோர்களும், உறவினர்களும் பதறியடித்துக் கொண்டு நல்ல தண்ணீர் ஓடை குப்பம் கடற்கரைக்கு வந்தனர். அங்கே, சாந்த் மற்றும் சந்தியா ஆகியோரின் உடல்களைப் பார்த்து கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: நாங்கள் இந்த கடற்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வோம். அதுபோல், விடியற்காலை நடைபயிற்சி செய்யும்போது காதலர்கள் இருவரும் அங்குள்ள பைபர் படகில் அமர்ந்திருந்தனர். பின்னர், கடற்கரையில் கைகோர்த்தப்படி அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவர்கள் கடல்தடுப்பு பாறாங்கற்கள் மீது நடந்து சென்று கடலை பார்த்தபடி வெகு நேரமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், கடற்கரையில் இருப்பவர்கள் யாரும் பார்க்காத சமயத்தில் கடலில் குதித்தனர். இந்த, கடற்கரைக்கு அடிக்கடி காதலர்கள் விடியற்காலையில் வந்து செல்வார்கள். அதுபோலதான், இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அமைதியாக இருந்து விட்டோம். தற்கொலை செய்துகொள்ள தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததால், அவர்களை விசாரித்து தற்கொலையை தடுத்து காப்பாற்றி இருப்போம் என்று இறந்த சாந்த மற்றும் சந்தியாவை உயிரோடு இருக்கும்போது பார்த்தவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

 

Advertisement

Related News