தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தான்குளம் அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாற்றக்கோரி பெற்றோர்கள் திடீர் போராட்டம்

Advertisement

*கல்வி அதிகாரி, போலீசார் பேச்சுவார்த்தை

சாத்தான்குளம் : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புளியங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 69க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நாசரேத்தில் இருந்து வரும் ஆசிரியர் ஒருவர் நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.

இவர் பள்ளிக்கு தாமதமாக வருவதாகவும், மாணவர்களை அவதூறாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த பெற்றோர்கள், அவரது நடவடிக்கை குறித்து தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கல்வி அதிகாரிகள் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற அனுப்பியுள்ளனர்.

மீண்டும் பள்ளிக்கு வந்த ஆசிரியர், குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலதாமதமாக வருவதுடன், மாணவர்களை துன்புறுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து, ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால், தாங்கள் ஆசிரியரால் மனரீதியாக பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள், அந்த ஆசிரியர் பணிபுரிந்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி நேற்று மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புகார் கூறப்பட்ட ஆசிரியரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன் அவரை வேறு பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவலறிந்து ஆழ்வார்திருநகரி வட்டார கல்வி அலுவலர் கமலா, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வனசுந்தர் ஆகியோர் வந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் கூறப்பட்ட ஆசிரியர், ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என உறுதியளித்து அதற்கான ஆர்டர் காப்பியை வட்டார கல்வி அலுவலர் காட்டினார்.

இதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புளியங்குளம் பள்ளியில் ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய போது, புகார் கூறப்பட்ட ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News