தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளியில் வழங்கிய காலை உணவில் மாணவனின் தட்டில் பல்லி கிடந்ததால் பெற்றோர்கள் வாக்குவாதம்

புவனகிரி : பள்ளியில் வழங்கிய காலை உணவில் மாணவனின் தட்டில் பல்லி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று காலை மாணவர்களுக்கு சேமியா கிச்சடி உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை மாணவர்கள் வாங்கி சாப்பிட்டபோது, ஒரு மாணவனின் தட்டில் பல்லி கிடந்தது.

Advertisement

இதை பார்த்த அருகில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உணவை சாப்பிடவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு வந்து, பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களை ஏன் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பவில்லை என்று கூறி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புவனகிரி போலீசாரும் பள்ளிக்கு வந்து காலை உணவு சாப்பிட்ட 17 மாணவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி விழுந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினரும், காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News