தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரமத்திவேலூரில் தாழ்ப்பாள் போட்டதால் அங்கன்வாடி மையத்தில் சிக்கி தவித்த குழந்தை

*தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்

Advertisement

பரமத்திவேலூர் : பரமத்திவேலூர் அருகே, அங்கன்வாடி மையத்தின் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த குழந்தையை, 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார்-நந்தினி தம்பதியின் 3 வயது மகன் ரித்விக், அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கன்வாடியில் இருந்த அனைத்து குழந்தைகளும், மையத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கன்வாடி மையத்திற்குள் சென்று தனியாக விளையாடிய ரித்விக், எதிர்பாராத விதமாக மையத்தின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டான். ஆனால், தாழ்ப்பாளை மீண்டும் திறக்கத் தெரியாததால், பயத்தில் அழ ஆரம்பித்து விட்டான்.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட அங்கன்வாடி மைய காப்பாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர்கள் கதவை திறக்க முயற்சி செய்தும், அவர்களால் முடியவில்லை. இது குறித்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெல்டிங் மிஷின் மூலம் அங்கன்வாடி மையத்தின் கதவின் ஓரத்தில் வெட்டி, நீளமான கம்பியை கொண்டு தாழ்ப்பாளை திறந்து, சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement