தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்: உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற நிஷாத்குமார்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 17வது பாராலிம்பிக் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகளை பதக்க வேட்டையில் இறங்கி உள்ளனர். மகளிருக்கான 200 மீட்டர் டி-35 ஓட்டப்பந்தய இறுதிசுற்று நேற்றிரவு நடந்தது. இதில், இந்திய வீராங்கனை பிரீத்தி பால் பந்தய தூரத்தை 30.01 விநாடிகளில் எட்டி, தனது தனிப்பட்ட புதிய சாதனையை பதிவு செய்து 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். சீனாவின் சியா சோவ் 28.15 விநாடிகளில் கடந்து தங்கமும், கியான்கியான் குவோ 29.09 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றனர். இவர்கள் இருவரும் தான் 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம், வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
Advertisement

நடப்பு தொடரில் பிரீத்தி பாலுக்கு இது 2வது பதக்கமாகும். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மகளிருக்கான டி35 100மீ ஓட்டப் பந்தயத்திலும் பிரீத்தி பால் வெண்கலம் வென்றிருந்தார். இதன் மூலம், பாராலிம்பிக்கில், டிராக் & ஃபீல்ட் போட்டியில், 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்பை பிரீத்தி பால் பெற்றுள்ளார். ஆடவருக்கான டி47 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத்குமார் வெள்ளி வென்று அசத்தினார். 2.04 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார். முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கிலும், நிஷாத் குமார் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சேர்ந்த டவுன்செண்ட் ராபர்ட்ஸ் 2.12 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்ற இருவருக்கும் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று பேட்மிண்டன், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், வில்வில்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் இறங்குவதால் பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியா தற்போது வரை ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களுடன், 27வது இடத்தில் உள்ளது. சீனா 33 தங்கம் உட்பட 71 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 23 தங்கம் உட்பட 43 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், 8 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் அமெரிக்கா 3வது இடத்திலும் உள்ளது.

Advertisement

Related News