தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாட்டுப்பட்டி அணையில் பாராகிளைடிங் சோதனை ஓட்டம்

மூணாறு : மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையில் பாராகிளைடிங் சோதனை ஓட்டம் நடைபெற்றது.தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம், மூணாறுக்கு வருகை தரும் சாகச சுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றுலா துறையின் சார்பில் வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அரசு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது. இந்நிலையில் மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி அணையில் ஹைடல் சுற்றுலாத்துறையினர் பாராகிளைடிங் என்ற சாகச விளையாட்டை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாட்டுப்பட்டி அணையில் பாராகிளைடிங் சோதனை நடத்தப்பட்டது.

இன்னும் 2 நாட்கள் பல்வேறு காலநிலைகளில் சோதனை நடத்தப்படவுள்ளது. அதன்பிறகு அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், இடுக்கி மாவட்டத்தில் குறிப்பாக நீர்நிலையில் பாராகிளைடிங் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்று ஹைடல் சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.