தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

*பள்ளி, கல்லூரி மாணவர்கள் அசத்தல்
Advertisement

நெல்லை : நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தினமும் நெல்லை மாவட்டம் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்வர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி மூலம் ஒவ்வொரு வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு வருவது தெரிய வந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி சிலர் மறைத்து வைத்து பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், மதுபாட்டில்களை கொண்டு செல்கின்றனர். அவர்கள் அருவி பகுதியில் பயன்படுத்தி விட்டு அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்.இதனால் வனப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் நெல்லை கள இயக்குநர் மண்டல வனப்பாதுகாவலர் ஆனந்த் உத்தரவின் பேரில், புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு வழிக்கட்டுதலின் படி பாபநாசம் வனச்சரக அலுவலர் குணசீலன் மற்றும் பாபநாசம் சூழல் சரக வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள பாலீத்தின் பைகளை அப்புறப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில், அகஸ்தியர் அருவி பகுதியில் பாலீத்தின் பைகள், பாட்டில்களை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் மன்னார்கோவில் அரசு பள்ளி மாணவர்கள், அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முகாமில் திருவள்ளுவர் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ரேவதி, வனவர்கள் செல்வசிவா, மோகன், வனக்காப்பாளர் அஜித், வனக்காவலர் பாசில் அமல், சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி சூழல் தன்னார்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News