தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பண்ருட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதி அதிமுக மகளிரணி நிர்வாகி உள்பட 2 பேர் பரிதாப பலி: சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர்கள்

பண்ருட்டி: கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது ஆட்டோ மீது கார் மோதி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அதிமுக மகளிரணி நிர்வாகி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்தவர் கவுரி(56), மயிலாப்பூர் மேற்கு பகுதி அதிமுக மகளிரணி 123வது வட்ட பொருளாளர். இவர் உறவினரான அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (65), லில்லி(52) ஆகியோருடன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சூரக்குப்பத்தில் உள்ள உறவினர் அஞ்சாபுலி(40) என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
Advertisement

அங்கிருந்து நேற்று முன்தினம் கவுரி, பரமேஸ்வரி, லில்லி, அஞ்சாபுலி மற்றும் உறவினர்களான பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த நிலவழகி(45), ராமச்சந்திரன்(63) ஆகியோருடன் முத்தாண்டிகுப்பம் கருப்புசாமி கோயிலுக்கு சென்று இரவு பூஜையில் பங்கேற்று விட்டு, நேற்று அதிகாலை ஆட்டோவில் பண்ருட்டி திரும்பி கொண்டிருந்தனர். பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே, பின்னால் வந்த காரின் டயர் திடீரென வெடித்ததில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோவில் சென்ற கவுரி, அஞ்சாபுலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(35) மற்றும் நிலவழகி, ராமச்சந்திரன், லில்லி, பரமேஸ்வரி ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News