தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நிர்வாக துறை இயக்குநர் ஆய்வு

பண்ருட்டி : நகராட்சி நிர்வாகதுறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

பின்னர் நகராட்சி நிரவாகதுறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி தெரிவிக்கையில், பண்ருட்டி நகராட்சி பகுதியில் ரூ.219 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தையும், குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளாக லட்சுமிபதி நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், பண்ருட்டி பேருந்து நிலையம் ரூ.470 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கடைகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவதையும், ரூ.582 லட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டி தினசரி சந்தை கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், ரூ.500 லட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மழைக்காலம் என்பதால் சாலைப் பணிகள், வடிகால் பணிகள் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து துரிதமாக முடிக்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், இணை இயக்குநர் லட்சுமி, ஆணையர் காஞ்சனா, நகராட்சி உதவி பொறியாளர் மற்றும் நகராட்சி பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement

Related News