தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பந்தலூர் அருகே இன்று காலை தேயிலை தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை

பந்தலூர்: பந்தலூர் அருகே இன்று காலை தேயிலை தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் இன்கோசர்வ் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அன்றாட பணிக்காக வெளியே வந்தனர். அப்போது தேயிலை தோட்டத்தில் உள்ள கம்பி வேலியில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுத்தை சிக்கி அதிலிருந்து வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடியதை கண்டனர்.

Advertisement

இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேவாலா ரேஞ்சர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர், தேவாலா போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறுத்தை அருகே செல்ல முடியாததால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பிறகே சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளை என வனத்துறையினர் மேற்கொண்டர்.

இதனை அடுத்து 4 மணி நேரத்திற்கு பின் சிறுத்தை மயக்க ஊசி செலுத்தப்பட்டு மீட்கப்பட்டது. இந்த சிறுத்தை சிகிச்சைக்கு பின் காட்டில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை பார்க்க அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News